கௌசிகா- கோமகள் குமுதா
வாசிப்பு 12 கௌசிகா- கோமகள் குமுதா பொதுவாக தமிழ் சரித்திர நாவல் என்றால் சேர, சோழ, பாண்டிய அரசுகளையும் அவர்களின் நாடுகளையும், வீர தீர பிரதாபங்களையும் சுற்றியே கதை எழுதப்படும். ஆனால், எழுத்துலக வரலாற்றில் முதன்முறையாக கொங்கு நாட்டையும், அதன் அரசன் கோவனையும் மையமாக வைத்து ஒரு சரித்திரத்தை படைத்து உள்ளார் ஆசிரியர் "கோமகள் குமுதா"(எங்கள் கோவையின் மகள்). அவர்களின் இந்த முதல் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ரம்யா ரவிக்குமார் க்கு என் நன்றி. ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அது நமக்கு புதிய அனுபவங்களையும் புதிய தகவல்களையும் தர வேண்டும். அப்படிபட்ட ஒரு புனைவு நாவல் தான் இந்த கௌசிகா..!. நான் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடிய ஊர்களைப் பற்றி நான் அறியாத பல தகவல்களையும் அதன் பழைய பெயர்களையும், பெயர் காரணத்தையும் இந்த புத்தகம் எனக்கு கற்பிக்கும் போது என் வீட்டில் இருந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் பொன்னூத்து மலையின் உச்சியில் அமர்ந்து இருப்பதுபோல ஒரு உணர்வு என்னுள் படர்ந்தது. கௌசிகா என்ற நதி கோவையில் ஓடி தாகம் தீர்த்தது எ...