Posts

Showing posts from April, 2022

ஆயுத தேசம் - கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு - இரா.மன்னர் மன்னன் - திறனாய்வு பகுதி 1

Image
  வாசிப்பு 47(1.O) ஆயுத தேசம் - கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு - இரா.மன்னர் மன்னன் திறனாய்வு பகுதி 1 ஆரியர்களாலும், தனது அரசியலுக்காக பொய்யான வரலாறை பேசி திணிப்பவர்களாலும்,  மதவாதிகளாலும் தமிழகத்தின் அறிவியலும் வரலாறும் தொடர்ந்து மறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று மறைக்கப்பட்டு உள்ளது. அது என்ன? அது தான் தொழில்நுட்பம்  அப்படி என்ன தொழில்நுப்டம் மறைக்கப்பட்டது?இன்று உலக பணக்காரன் யார் என ஒரு பட்டியலை போடுகிறோமே, அந்த பட்டியலில்  முதல் பணக்காரரை முடிவு செய்வதே இந்த தொழில்நுட்பம் தான் . அந்த பட்டியலில் முதல் முதலாக இடம் பிடித்தவர் ஆப்ரஹாம் டெர்பி (கிபி. 1678 - 1717 ) அந்த தொழில்நுட்பம் இரும்பு . ஆம்  கிமு.3 ஆம் நூற்றாண்டிலேயே இந்த உலகத்திற்கு இரும்பு தொழில்நுட்பத்தை  அறிமுகம் செய்தது தமிழர்கள் தான் ஆனால் சேர, சோழ , பாண்டிய நாடுகள்  அறிமுகம் செய்யவில்லை.இந்த  வியக்கத்தக்க தொழில்நுப்பத்தை உருவாக்கியது கொங்கு நாடு தான் என்ற  தனது ஆய்வுகளை தக்க சான்றுகளோடு நம் முன் இந்த பொத்தகத்தின் மூலம்  நிறுவுகிறார் ஆய்வ...

தெய்வமே சாட்சி - ச.தமிழ்ச்செல்வன்

Image
  வாசிப்பு 46 தெய்வமே சாட்சி - ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் இந்துமதி கணேஷ் அவர்களால் எனக்கு பரிசு அளிக்கப்பட்டப் பொத்தகம். அவர்களுக்கு என் நன்றிகள் இந்த பொத்தகத்தின் ஆசிரியருக்கு என் கடுமையான கண்டனங்களுடன் எனது பொத்தக திறனாய்வை தொடங்குகிறேன்."தர்கா வழிபாடு கூடாது என இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கூறுகிறது" என்று பதிவு செய்து உள்ளார். குரானையும் நபி மொழியையும் பின்பற்ற கூடிய இஸ்லாமியர் ஒவ்வொருவரும் தர்கா வழிபாடு கூடாது என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள் அது இஸ்லாத்திற்கு எதிரானது எடுத்துக்காட்டாக ஒரு நபிமொழி இவ்வாறு சொல்கிறது. "அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)"  இப்படி இருக்க தர்கா வழிபாட்டை எதிர்ப்பவர்கள்  தீவிரவாதிகள் என பதிவு செய்ய இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இதற்கு ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் மன்னிப்புக் கேட்ட...

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் : கே.வி.ஷைலஜா

Image
  வாசிப்பு 45 சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் : கே.வி.ஷைலஜா மலையாள கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் மலையாள சுயசரிதைக் கட்டுரை தொகுப்பான சிதம்பர ஸ்மரணவின் தமிழ் மொழி பெயர்ப்பே இந்த சிதம்பர நினைவுகள்.தட்டில் என்ன இருக்கிறது என்பதைத் தடவித் தடவித் தெரிந்துகொள்ள ஆசைப்படும் ஒரு குருட்டுப் பிச்சைக்காரனைப் போல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அடை காக்கப்பட்ட இப்பொத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ய தனக்கு பேச மட்டுமே தெரிந்த தனது தாய் மொழியான மலையாளத்தை படிக்க கற்றுக்கொண்டேன் என ஷைலஜா அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டது எனக்கு ஏதோ மிகைப்படுத்தி சொல்லுவது போலவே தோன்றியது. ஆனால் இப்பொத்தகத்தை படித்தப் போது தான் அது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று எனக்கு புரிந்தது. மொழிபெயர்ப்பு என நம்மால் உணரமுடியாத அளவுக்கு ஏதோ பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் ஆன்மாவை தனக்குள் வாங்கிக்கொண்டது போல ஒவ்வொரு எழுத்தையும் உணர்வுப் பூர்வமாக மொழிபெயர்ப்பு செய்து இருக்கிறார் யார் இந்த பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ? சாதாரண மனிதர் தானா? உலக மனித அனுபவங்கள் அனைத்தையும் ஒன்றுகூட்டி வார்த்து எ...

பார்வை வழிப் பயணம் - லதா

Image
வாசிப்பு 44 பார்வை வழிப் பயணம் - லதா  நினைத்து பார்த்தால் கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது! ஏன் இந்த பொத்தக திறனாய்வு எழுதக்  கூட எனக்கு சிறிது நடுக்கமாக தான் இருக்கிறது! . இந்த பொத்தகத்தை ஒரு ஆண் எழுதி இருந்தால் என்ன ஆகிருக்கும்? அவனுக்கு ஆண் ஆதிக்கவாதி, அடிப்படைவாதி போன்ற சொற்களை கரும்புள்ளி, செம்புள்ளியாக குத்தி வசை மொழிகளை மாலையாகச்  சூடி  கழுதை மீது ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று இருப்பார்கள் ஏன் என்றால் பெண்ணியம் மட்டுமே பேச்சுப்  பொருளாக இருக்கும் காலத்தில் ஆண்ணியத்தையும் பேசுகிறது. ஆசிரியர் லதாவின் "பார்வை வழிப் பயணம்" என்னும் இப்பொத்தகம்.  ஆண்டு ஆண்டு காலமாக பெண் உயர்ந்தவள் ? அல்லது ஆண் உயர்ந்தவன்? என்ற விவாதம் நடந்து வருகிறது. பெண் தான் உயர்ந்தவள் என்றும் இல்லை. இருவரும் சமாமனவர்கள் என்றும் முற்போக்குவாதிகள் என சொல்லிக்கொள்ளும் சிலர் கூறி வருகிறார்கள் இதை முற்றிலும் மறுக்கிறது இந்த பொத்தகம். ஆண், பெண் இருவரும் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர்களோ , தாழ்ந்தவர்களோ அல்லது சமமானவர்களோ கிடையாது, ஏன் ஆணுக்கு ஆணோ , பெண்ணுக்கு பெண்ணோ கூட உயர்ந்தவர்களோ ,  தாழ...

இலக்கற்ற பயணி - எஸ்.ராமகிருஷ்ணன்

Image
வாசிப்பு 43  இலக்கற்ற பயணி - எஸ்.ராமகிருஷ்ணன் மனது ஒரு நிலையில் இல்லாமல் தாவி தாவி குதிக்கும் போதும்,நிலைக்குத்தி நகர முடியாமல் சிக்கி தவிக்கும் போதும், அதிலிருந்து விடுபட நான் கையில் எடுக்கும் ஓரே பிணி தீர்க்கும் மருந்து எஸ்.ரா வின பொத்தகம் தான் .அது என்னை உருவம் தெரியாத மனிதர்களை நேசிக்க வைக்கும்.  ஊர் சுற்றி பறவையாக  என்னை மாற்ற முயற்சிக்கும். அதே போலவே  இலக்கற்ற பயணியும் என் அடையாளங்களை மறக்க வைத்து, எடையற்ற  இலையின் சருகாய்  காற்றில் மிதக்கச் செய்து எல்லையற்றப் பயண அனுபவங்களுக்கு  என்னை சொந்தக்காரன் ஆக்குகிறது. பொதுவாக எஸ்ரா வின் பயண பொத்தகம்  இயற்கையின் அழகியலை  போற்றும் மாறாக இந்த பொத்தாம் இந்தியா மற்றும் உலக வரலாற்றை  பேசுகிறது. வரலாறு என்பது முடிந்துப் போன கடந்தக் காலமில்லை அது உயிர் உள்ள நிகழ்காலம் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வது மட்டுமே அல்லாமல் ஒவ்வொரு பக்கத்தின் முடிவிலும் வரலாற்றின் மீது நாம் காட்டும் அலட்சியத்தை வருத்தம் கலந்தக் கோபத்தோடு கண்டிக்கிறார். பயணம் செய்வது வேறு சுற்றுலா செல்வது வேறு, பயணம் என்பது உலகை அ...