Posts

Showing posts from November, 2021

திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா? - பெ. மணியரசன்.

Image
வாசிப்பு 37 திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா?  - பெ. மணியரசன். . திராவிடம் என்றால் என்ன ? யார் எல்லாம் திராவிடர்..? * தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் நிலப்பரப்பில் வாழ்பவர்கள் திராவிடர்கள், அவர்கள் திராவிட இனத்தை சார்ந்தவர்கள். *ஆரியர் அல்லாதவர்களை குறிக்கும் சொல் தான் திராவிடர், ஆரியத்தை எதிர்ப்பது தான் திராவிடம். *திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம், அதை பின்பற்றும் தமிழர்கள் தான் திராவிடர்கள்.  *தமிழர்கள் தான் திராவிடர்கள். திராவிடர் என்றும் அழைக்கலாம் தமிழர் என்றும் அழைக்கலாம். *திராவிடம் என்பது வாழ்வியல் *திட்டம் தான் திராவிடம் எது வேணாலும் பேசுவது நரம்பு இல்லாத நாக்கு என்றால் எந்த பொருளையும் தனது என்று திருடி கொள்ளும்  பொருள் அற்ற ,தமிழே இல்லாத திராவிடம். அந்த திராவிடத்தாலும் அதை கொண்டு அரசியல் செய்தவர்களாலும் தமிழரின் மறுமலர்ச்சி வளர்ந்ததா அல்லது வழி மாறியதா என்பதை நன்கு ஆராய்ந்து வரலாற்று தரவுகளுடன் இந்த பொத்தகத்தில் பதிவு செய்துள்ளார் ஐயா தமிழ்த்தேசிய ஆசான் பெ.மணியரசன் திராவிட இயக்கமும் பெரியாரும் இல்லையென்றால் தமிழ...

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி - இந்துமதி கணேஷ்

Image
  வாசிப்பு 36 கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி - இந்துமதி கணேஷ் காதல் என்னும் ஒரு மாயவலையில்  சிக்கிக்கொண்டால் ஆயுள் வரை சிறை. இது இளமையின் வண்ணம் எல்லாம் காட்டும் திரை சிலர் இதயத்தில் வண்டாய் மாறிப் போடும் துளை வண்டுகள் துளைப்போடுவது ஒன்றும் ஆச்சிரியம் இல்லை ஆனால் இங்கே காகிதப் பக்கங்கள் நம் இதயத்தில் துளைப் போடுகின்றன .எழுத்துகள் நம்மை மாயவலை விரித்துச் சிறை வைக்கிறது, சொற்களை வாசிக்கும் போது காதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, கடந்து வந்த இளமையின் நினைவுகளை வண்ணங்கள் கூட்டி திரையிட்டுக் காட்டுகிறது. இதை எல்லாம் செய்யும் மாயாவி யார்?  கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி என்ற மாயக்கோலை வைத்து நம்மை ஆட்டிப்படைக்கும் அந்த மாயாவி நம் தோழி இந்துமதி கணேஷ். உங்களுக்கு எத்தனை வயது ஆகி இருந்தாலும் , காதுரோத்தில் வெள்ளை முடி மின்னினாலும், பற்கள் எல்லாம் நடனம் பழகி கொண்டு இருந்தாலும். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் போது உங்கள் வயது 20லிருந்து 25க்கு உள்ளே தான் இருக்கும். கோல் ஊன்றி நடக்கும் கிழவனும்  கோலை வீசி குலுங்கி நடப்பான். அந்த அளவுக்கு  இந்துமதியின் ஒவ்வொரு...