Posts

Showing posts from May, 2021

ஆதலினால் - எஸ். ராமகிருஷ்ணன்.

Image
வாசிப்பு 30 ஆதலினால் - எஸ். ராமகிருஷ்ணன்.                              ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு பொது விழாவில் என்னிடம் ஒருவர் வந்து உங்களை எங்கயோ பார்த்த மாதிரியே இருக்குங்க but where னு  தாங்க தெரியலிங்கனு சொன்னார். அதுக்கு நான்,  வேற எங்கையும் இல்லைங்க  ஐந்து வருடமாக நான் தான் உங்கள் பக்கத்து வீட்டுகாரன் னு சொன்னேன். இத்தனை வருடக்காலம் அவர் அருகில் இருந்தும், தினம் தினம் எதிரில் பார்த்தும்  அவர் என்னை பார்க்கவில்லை. இது மனிதர்களுக்கு மட்டும்  அல்ல. சில நேரம் கடவுளுக்கும் பொருந்தும். எங்கயோ இருக்கும் திருவரங்கத்திற்க்கும் , தில்லைக்கும் இருக்கும் மதிப்பு. பக்கத்திலே இருக்கும் பெருமாள் கோவிலுக்கும் , சிவன் கோவிலுக்கு கிடைப்பது இல்லை.  யானைக்கு   கொடுக்கப்படும் கவனம் எறும்புகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆனால் யானை எந்த அளவுக்கு வியப்பானதோ அதே அளவு வியப்பானது எறும்புகள்.  எல்லா எறும்புகளும், குருவிகளும் ஒன்று போலத் தெரிவது போல, மனிதர்களையும் பொதுவில் அறிந்து இருக்கிறோம...

கானகன் - லக்ஷ்மி சரவணகுமார்.

Image
வாசிப்பு 29 கானகன் - லக்ஷ்மி சரவணகுமார். காடுகள் தான் இந்த உலகத்தின் உயிர், அவைகள் இல்லை என்றால் இந்த உலகம் நீரின்றி, காற்றின்றி அழிந்து போகும். அப்படி உயிராக இருக்கும் காட்டை காப்பாற்றுவது அங்கேயே பிறந்து வாழும் கானகன்கள் தான், யார் வேண்டுமானாலும் வேட்டைக்காரன் ஆகலாம் ஆனால் காட்டை நேசித்து அதன் ஆத்மாவை உணர்ந்தவன் தான் கானகன் அக முடியும். அப்படி ஒரு ஆதிமலை என்ற காட்டையும் அதை காக்கும் பளியர்களயும் வைத்து சொல்லும் கதை... இல்லை கதை மூலமாக விரியும் காடு தான் இந்த கானகன். இது ஒரு புலி வேட்டையில் தொடங்கி, புலி மனிதனை  வேட்டையாடுவதில் முடிவடைகிறது. தங்கப்பன் என்பவன் தான் அந்த வேட்டைக்காரன். அவனுக்கு மூன்று மனைவிகள் மாரி, சகாயராணி, செல்லாயி. கடைசி மனைவியின் மகன் வாசி. வாசியின் தந்தை சடையன். தங்கப்பனின் நண்பன் அன்சாரி இவர்களுடன் காடுகளும் புலிகளும் தான் முக்கியமான கதாபாத்திரங்கள். தங்கப்பனுக்கும் காட்டை நேசிக்கும் அவனது வளர்ப்பு மகன் வாசிக்கும் இடையில் நடக்கும் பாசம், வெறுப்புகள் மற்றும் உறவு சிக்கல் தான் கதையின் இயக்கம் என்றாலும் கதையில் நிகழும் மிருகத்தனமான வேட்டைகளும், மரத்தை வெட்டி காட...