Posts

Showing posts from September, 2021

பெருந்தக்க யாவுள-யாத்திரி கார்த்திக்

Image
 வாசிப்பு 35 பெருந்தக்க யாவுள-யாத்திரி கார்த்திக் (16 வயது மேற்பட்டவர்களுக்கான கதை இது) வால்கா முதல் கங்கை வரை எனக்கு தாலாட்டு படிக்க! எப்பவும்  தீவிர கருத்தை படிக்காமல் கொஞ்சம் யாத்திரி கவிதைகளை படியுங்கள் என ஐயா Prasancbe Thamirabarani  எடுத்துரைக்க! நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டிங்கன்னு என்ற நகைப்போடு தோழி Priyadharshini Gopal   இந்த பொத்தகத்தை படிங்க திருந்துவிங்கன்னு பரிந்துரைக்க! உடனே  நான் byng செயலியை பதிவிறக்கம்  செய்து படிக்க ஆரம்பிக்க. எருக்கஞ்செடியின்  விதை வெடித்து தாத்தா பூச்சியாக வெளியே பறப்பது போல் என்னுள் இருந்த கொஞ்ச நஞ்ச கசடுங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியேறி நான் பரிசுத்தமானவன் ஆனேன்! எஸ்.ரா வின் துணையெழுத்து பொத்தகத்திற்கு பிறகு என்  மேல் தொடர் தாக்குதல் நிகழ்த்திய தொடர் இது .மொத்தம் முப்பது அத்தியாயங்களும் பெண்ணின் உணர்வுகளும், தேவைகளுமே இதில்  பேச்சு பொருள் மேகலா மற்றும் அனுபமா என்ற இரண்டு பெண்களின் கதை இது. ஒருத்தி இந்தச் சமூகத்துக்குப் பயந்து வாழ்பவள்.இன்னொருத்தி தன்னுடைய வாழ்வை தனக்காக வாழ்பவள். இக்கதையில் மு...

திணிக்கப்பட்டதா திராவிடம்? - விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

Image
 வாசிப்பு 34 திணிக்கப்பட்டதா திராவிடம்? -  விழுப்புரம் கோ.செங்குட்டுவன் திராவிடம் என்றால் என்ன? மொழியா? இனமா? இடமா? அது எங்கு இருந்து வந்தது? தமிழிலேயே இல்லாத சொல்லை வைத்து கொண்டு எப்டி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆள  முடிந்தது? இப்படி திராவிடத்தின் வேரை தேடி சென்றால் நமக்கு கிடைப்பது எல்லாம் இது போல  எண்ணற்ற கேள்வி குறிகள் தான். இந்த கேள்விகளுக்கு எல்லாம் விளக்கமான விடையை விழுப்புரம் கோ.செங்குட்டுவன் அவர்கள் "திணிக்கப்பட்டதா திராவிடம்? "என்று தனது புத்தகத்தின்  வழியாக  நமக்கு சொல்கிறார். திராவிடம் 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் ஆங்கிலத்தால் பரவலாக்கப்பட்ட வடசொல் 20-ஆம் நூற்றாண்டில் தழைத்து வளர்ந்து, இன்று கிளைப்பரப்பி நிற்கிறது. கடந்த நூற்றாண்டில் தமிழ்மண்ணின் இருபெரும் அரசியல் ஆளுமைகள் தான் இந்த கருத்தியலை இங்கு ஆழ அகலப் பரப்பியவர்கள். தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் திராவிடத்திற்கு ஒரு தலைமுறையே ஆட்பட்டிருந்தது .அடுத்து வந்த தலைமுறைக்கும் அதன் பாதிப்பு இருந்தது.தற்போதைய தலைமுறை இதிலிருந்து விடுபட யோசிக்கிறது. அதுவும் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்...