கண்ணீரும் புன்னகையும் (முகில்)
வாசிப்பு 16 கண்ணீரும் புன்னகையும் (முகில்) "மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற அடிப்படையில் இந்த உலகம் பல மாறுதல்களை கண்டுள்ளது. ஆனால், அந்த மாறுதலுடனே போட்டி போடும் அளவுக்கு மனிதர்களின் சில எண்ணங்கள் மாறாமல் அன்றும்..இன்றும்.. என்றும்.. பாடம் செய்த மம்மி போல அப்படியே இருக்கின்றது. அவற்றில் முக்கியமானது.. ஒரு மனிதன் உண்மையானவனாக, எதையும் வெளிப்படையாக யார் என்னவென்று பாராமல் பேசுபவனாக, எந்தவொரு கசப்பான அனுபவங்களுக்கும் தன் புன்னகையை மட்டுமே பதிலாக தருபவனாக இருந்தால்.. "திமிர்ப்பிடித்தவன், கெட்டவன்" என்று முத்திரை குத்தி அவனிடம் இருக்கும் சிறு கெட்ட பழக்கத்தைகூட பெரிதுபடுத்தி, ஒதுக்கி வைத்து விடுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு மாபெரும் கலைஞனின் உண்மை சரித்திரம்தான் "கண்ணீரும் புன்னகையும்". இந்த புத்தகத்தை பல தருணங்களில் வாங்க நினைத்து, ஏதோ ஒரு காரணத்தினால் வாங்கவே முடியாமல் தள்ளிப்போனது. அதனால், கிண்டிலில் இலவசமாக வந்த உடனே பதிவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன். எழுத்தாளர் முகில் அவர்களின் முதல் புத்தகம் என்பதால் கூடுதல் ஆர்வம் சேர்ந்துகொண்டது. முகில் ...