சித்தன் போக்கு ( பிரபஞ்சன்)
வாசிப்பு 20 சித்தன் போக்கு ( பிரபஞ்சன்) "பிரபஞ்சன்" இந்தப் பெயர் எனக்கு சில வருடங்களுக்கு முன், பாண்டிச்சேரி பற்றி புதியதலைமுறை இதழில் வந்த தொடர் கட்டுரைகள் மூலம் அறிமுகம். பாண்டிச்சேரிக்கு இவ்வளவு பெரிய வரலாறு பின்புலம் உள்ளதா என, என்னை வியக்க வைத்த எழுத்து அது. பிறகு "தாழப் பறக்காத பரத்தையர் கொடி" என்னும் புத்தகம் அவரை நெருங்கிச் செல்ல வைத்தது . பவா வின் கதைசொல்லல் அவரை நேசிக்க தூண்டியது, அந்த தூண்டலினால் போகிற போக்கில் வாங்கியது இந்த "சித்தன் போக்கு". ஒரு கதை நம்மை என்ன செய்யும்..?நெருப்பு தன்னோடு சேரும் அனைத்தையும் நெருப்பாக மாற்றுவதுப் போல தன்னை படிப்பவர்களை அதனுள்ளே இருக்கும் பாத்திரமாகவே மாற்றிவிடுகிறது கதை. எந்த ஒரு கதையும் தனித்துவமானது இல்லை. அது நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு நினைவின் சாயலை கொண்டுள்ளது. எதையும் நினைவுபடுத்தாத கதை எளிதில் முடிவடைந்து கண்ணுக்கு தெரியாமல் கரைந்து விடுகிறது. காலம் இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ கதைகளை கருவிழியின் அளவைப் போல அதன் பிறப்பில் இருந்து மாற்றாமல் வைத்துக் கொண்டேயிருக்கிறது. அவ்வாறு என்றும் மரணம...