இதுவே சனநாயகம்! - தொ.பரமசிவன்
வாசிப்பு 33 இதுவே சனநாயகம்! - தொ.பரமசிவன் இதுவே சனநாயகம்! - தொ.பரமசிவன் தமிழர்களின் வழிப்பாடான நாட்டார் வழிபாடு என்று சொல்லப்படும் குலதெய்வ வழிபாடு என்றாலே அதை எதிர்க்க திராவிடர்களும், ஆரியர்களும் கை கோர்த்து கொள்வார்கள். ஒருவர் சிறுதெய்வ வழிபாடு என்று இழிவு செய்வார்,இன்னோருவர் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் குலதெய்வ வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என்பார். ஆனால் ஐயா தொ.பரமசிவன் அவர்கள் திராவிட இயக்கத்தில் இருந்தாலும் அதை மக்களின் தெய்வங்கள் என்று போற்றுவார். தன் ஆய்வுகளில் கிடைத்த உண்மை என்னவோ அதை அப்படியே எந்த வித மாற்றமும் இல்லாமல் பதிவு செய்பவர்.அதனாலேயே அவரின் புத்தகம் என சொன்னாலே எனக்குள் ஒரு பசுமை போர்த்திய குளிர்ச்சி எற்படும்.முக்கியமாக இந்த புத்தகத்தில் வருணாசிரமம் விசயநகரப் பேரரசர்களால் இங்கே இந்துத்துவத்திற்குக் கால்கோல் இட்டது என்ற வரலாற்று உண்மையை பதிவு செய்தது எனக்கு என் வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது பெரியார்,அண்ணா இருவருமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களைச் சமூகக் கேடுகளாக நினைத்தனர். அதனாலேயே தாக்கினார்கள். “நிறுவனமய மாக்கப்பட்ட மதத்தை நான் வெறுக்கிறேன்" என்பத...