அர்த்தமற்ற இந்து மதம் - மஞ்சை வசந்தன்
வாசிப்பு 27 அர்த்தமற்ற இந்து மதம் - மஞ்சை வசந்தன் ஒவ்வொரு மனிதனும் அவரவர்களுக்கு விருப்பமான பயத்தை கொண்டு இருப்பது இயல்பே.ஆனால் ஒரு புத்தகத்தை வாசிக்க போகிறேன் என்று சொன்னவுடனே பயங்களின் குவியல்கள் பின்னுட்டமாக என் பதிவில்.. இல்லை! என் அறிவிப்பில் வந்து குவிந்தது இந்த உலகம் கொரனாவை விட பெரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையே உணர்த்துகிறது. இந்த புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் சொல்லும் காரணம் இது எங்கள் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது என்பதே அவர்களிடம் நான் கேக்குறேன் ஒரு புத்தகத்தின் பெயர்க்கே ஆட்டம் காணும் அளவுக்கு உங்கள் நம்பிக்கை அவ்வளவு பலகீனமானதா? இது தன் மீது நம்பிக்கை இல்லாதவன் அந்த பயத்தை தன் மனைவியின் ஆரோக்கியமான நட்பு வட்டத்தின் மீது செலுத்தி அதை துண்டிக்க செய்வதை போன்ற பயந்தகோழித்தனம் தான் உங்கள் பின்னுட்டங்கள் வெளிப்படுத்துகிறது. அர்த்தமற்ற இந்து மதம் எழுதி இருப்பவருக்கு அர்த்தமற்ற இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம் என்று ஏன் எழுத தோன்றவில்லை? இது கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூல்க்கு மறுப்பாக எழுதப்பட்ட...