Posts

Showing posts from August, 2020

ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும் - பிரபு தர்மராஜ்

Image
  வாசிப்பு 24 ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும் - பிரபு தர்மராஜ் ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுறதே பெரும்பாடு. அதுவும் சிறுகதை தொகுப்பிற்கு எழுதறதுன்னா வழுக்குமரம் ஏறுற மாதிரிதானுங்க. ஒரு அடி ஏறினா, பத்தடி கீழே இறங்கும். போதாக் குறைக்கு இந்த எழுத்துகாரரு ஆமா, இந்த ஆளு பேரென்ன.. அ.. "பிரபு தர்மராசு" வீட்டுல குடிசைத் தொழிலாக Nitrous oxide தயாரிக்கிறாருன்னு நினைக்கிறேன். அச்சு மையோட சேர்த்து அதைக் கலந்து புத்தகத்தை அச்சடிச்சு இருக்கார். அதுவும் பத்தாம ஒவ்வொரு பக்கத்தையும் சாராயத்தில் ஊறவச்சு, காயவச்சு ஒட்டி புத்தகமாக மாத்தி கொடுத்திருக்கார். வார்த்தையோ, அர்த்தமோ புரியாம ஒரு பக்கத்தை முடிக்க தாமதம் ஆயிருக்கு. ஆனால், சிரிச்சு சிரிச்சு தாமதமானது இதுதாங்க முதல் தடவ. தெரியாத்தனமா, வீட்டு கதவை திறந்து வச்சுட்டு, படிச்சு தொலைஞ்சுட்டேன். தனியா இருக்க புள்ளைக்கு ஏதோ ஆயிப்போச்சுன்னு, பக்கத்து வீட்டுங்காரங்க எல்லாம் வந்து எட்டிப் பார்த்துட்டு போறாங்க. இந்த லட்சணத்தில் எங்கப்போய் இந்த  ஒவ்வொரு கதைக்கும் விமர்சனம் எழுதுறது. முடிஞ்ச அளவுக்கு மொத்தமா ஊத்துறேன் .. ச்சை.. எழுதுறேன்.  அதுக்கு...

இறவான் - பா. ராகவன்

Image
வாசிப்பு 23 இறவான் - பா. ராகவன் இதை எப்படி சொல்லுவது, எதைக்கொண்டு புரிய வைப்பது வார்த்தைகளால் புரிய வைக்க இது சாதாரண கதை இல்லை. அப்படியே புரிய வைக்க முயற்சித்தாலும் உலகத்தில் உள்ள  அனைத்து போதை பொருட்களையும் கலந்த கலவையை உண்டவனின் வார்த்தை எப்படி புரியும்படியாக இருக்கும். ஆம், நான் இப்போது இமயத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் பறவையைப்போல போதையின் உச்சியில் "ஆப்ரஹாம் ஹராரி"யின் இசையுடன் உலாவி கொண்டு இருக்கிறேன். இது எதைப் பற்றிய நாவல், யாரை பற்றிய நிகழ்வு.. ஒரு இசை மேதை, ஒரு யூதன்.. ஆப்ரஹாம் ஹராரி, எட்வின் ஜோசஃப், சந்தானப்ப்ரியன் என மூன்று பெயர்களைக்கொண்ட பெரும் இசை மேதையின் கதை என்று ஒற்றை வரியில் கடந்துவிடக்கூடியதல்ல. இதைக் கதை என்றுகூட சொல்ல முடியாத ஒப்பற்ற காவியம். இதுவரை யாரும் எழுதாத, இனியும் எழுத முடியாத, இதுவரை  வந்தவைகளோடு ஒப்பிடமுடியாத இசை, நட்பு, காதல், காமம், கலவி எல்லாம் கலந்த ஒரு சாத்தானின் இதிகாசம். ஆம், இது கடவுளால் படைக்கப்பட்டு  பிறகு கடவுளாலயே கைவிடப்பட்டு துரத்தப்பட்ட லூசிப்பர் அல்லது இப்பிலிஷை கருவாக கொண்டு இயற்றப்பட்ட நவீனகால சாத்தானின் இ...