Posts

Showing posts from March, 2022

ராஜ வனம் - ராம் தங்கம்

Image
வாசிப்பு 42  ராஜ வனம் - ராம் தங்கம் "முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்ப கருவி வானம் கதழ் உறை சிதறிகார் செய்தன்றே கவின் பெறு கானம்" (அகம். 4:1-7) பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் என்ற நம் பெரும்பாட்டானின் கூற்று நம்மால் செயல்படுத்தபடுகிறதோ இல்லையோ காடுகளால்  நன்கு செயல்பட்டு வருகிறது .காடு பல்வேறு உயிரினங்களின் புகலிடம்; வாழ்விடம். காடுகளை மரங்களின் வகைமைகளைக் கொண்டே வகைப்படுத்தினும், காட்டுச் சூழல் மண்டிலம் என்பது விலங்குகள், பறவைகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். பல்லுயிரின வளர்ச்சிக்கு அடித்தளமாக இக்காடுகள் விளங்குகின்றன. அதனால் தான் காடுகளுக்கு பல பெயர்களை தமிழ் இலக்கியம் வரையறுகிறது மரங்கள் அடர்ந்த மலைக்காடுகள் கானகம் என்றும், முல்லை நிலக் காடுகள் புறவு என்றும், அரசனது காவலில் உள்ள காடு மிளை, அரண் என்றும், சிறு மரங்கள் நிறைந்த காடு இறும்பு என்றும், மரங்கள் கரிந்து போன காடு சுரம், பாலை என்றும், வெயிலால் வாடிய காடு முளி என்றும், காவ...

உணவு சரித்திரம்(பாகம் - 3) - முகில்

Image
வாசிப்பு 41  உணவு சரித்திரம்(பாகம் - 3) - முகில் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தேரே ‘உண்டி முதற்றே உணவின் பிண்டம், உணவெனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே”— (புறநானூறு) சரித்திரம் எங்கு இருந்து தொடங்கியது என சரித்திர பக்கங்களை திருப்பி பார்த்தால் அது மனிதன் எப்போதிலுருந்து சப்புக்கொட்டி உண்ண ஆரம்பித்தானோ அந்த காலத்துக்கு சென்று நிற்கிறது ,   நீர் இன்றி அமையாது உழவு , உழவு இன்றி அமையாது உணவு, உணவு இன்றி அமையாது உலகு. ஆகா உலக சரித்திரம் என்பது உணவு சரித்திரத்தைக் கொண்டே படைக்கப்படுகிறது. மிளகு என்ற உணவுக்காக தான் இந்தியா முதல் முறையாக அடிமையாக்கப்பட்டது, உணவு தான் ஒரு ஊரின் முக்கியமான அடையாளமாக திகழ்கிறது (திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா), உணவை வைத்து தமிழ் மருத்துவமும் அதை சார்ந்தத் தமிழ் பழமொழிகளும் உருவாக்கப்பட்டன. உணவை வைத்து தான் புராணங்கள் புனையப்படுகிறது. உணவை வைத்து தான் கடவுள் வழிபாடும் மற்றும் பண்பாடும் பிரித்தறியப்படுகிறது.இவ்வளவு ஏன் தற்கால அரசியலே உணவை கொண்டு தான் நடத்தப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த உ...

தமிழர் அறிவியல் மரபு

Image
வாசிப்பு 40 தமிழர் அறிவியல் மரபு என்னடா இருக்கு உன் தமிழில் , அது முட்டாள்களின் மொழி, காட்டுமிராண்டி மொழி, நிஷபாஷை இப்படி பல ஆண்டுகளாக சொல்லி சொல்லி தமிழையும் தமிழர்களையும் தாழ்த்தி புறக்கணித்து அயலார் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தமிழால் ஒன்றும் ஆகாது தமிழினத்திற்கு ஒன்றும் தெரியாது, ஆங்கிலேயர்களால் தான் நமக்கு அறிவியல் அறிமுகமானது போன்றத் தவறானக் கருத்தை நம்மிடம் பரப்பி நம்மை தாழ்வுமனபான்மையில் குனிக்குறுக வைத்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேல் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டு இருக்கிறது ஒரு கருப்பு ஆடுகளின் கூட்டம். அதற்கு நம் தமிழினத்தின் கணிசமானவர்கள் துணை போவது தான் இங்கே வேதனைக்குரியது.  இவைகளை அவர்களால் எப்படி சாதிக்க முடிந்தது என எண்ணி பார்க்கையில், அன்று தமிழர்களுக்கு வரலாற்று அறிவு குறைவு. அதை பயன்படுத்தி தமிழர்களின் உண்மையான வரலாறை அவர்களிடம் போய் சேர விடாமல், அவர்கள் சொன்ன கதைகளையும், பொய்களையும் தமிழர்களின் உண்மையான வரலாறு என நம்ப வைத்து, கேள்வி கேக்கும் வரலாறு அறிந்த சில தமிழர்களையும் பயமுறுத்தி அடக்கி உள்ளது இந்த கருப்பு ஆடு கூட்டம். ஆனால் இனி அவர்களின் தந்திரம் பலிக்க...