Posts

Showing posts from August, 2023

விதை அரசியல் - பாமயன்

Image
  வாசிப்பு 58 விதை அரசியல்  - பாமயன் சீசனில் இல்லாத பழங்களை மனிதன் எல்லா பருவத்திலும் உண்ண பேராசை பூண்டபோது வேளாண்மையிலிருந்த இயற்கை நீங்கியது.  - ஜப்பானிய வேளாண்மை அறிஞர் - மசனாபு ஃபுக்கோகா இங்கே நான் குறிப்பிட இருக்கும் விடயங்களை தாண்டி இந்த பொத்தகத்தில் சொல்லப்பட்டவை ஏராளம். அவை மிக அதிர்ச்சியானதும் கூட.  இந்த நிலைக்கு வணிகமோ, அரசியல்வாதிகளோ, தவறான ஆராய்ச்சிகளோ மட்டும் காரணம் அல்ல நாமும் நம் அலட்சியமும் இங்கே முக்கியமான காரணங்கள். இந்த பொத்தகத்திற்கு கிடுக்கம் எழுத குறிப்பு எடுப்பதற்காக வேறு யாராவது இந்த பொத்தகத்தை பற்றி எழுதி உள்ளார்களா என்று இணையத்திலும் முகநூலிலும் தேடும் போது மிகவும்   அயற்சிக்கு உள்ளானேன். இந்த பொத்தகத்தை பற்றி  ஒருவர் கூட எழுதவில்லை. இயற்கையை ரசிக்கிறோம் .கவிதை புனைகிறோம், கட்டுரை வரைகிறோம் ஆனால் அந்த இயற்கையையும்  அதற்கு இருக்கும்   ஆபத்துகளையும்  அதை தடுக்கும் நுண்ணறிவுளையும்  படிக்கவும் எழுதவும் நாம் பெரும்பாலும் தவறுகிறோம் அல்லது விரும்புவது இல்லை.   இயற்கை வேளாண்மை  என்று சொல்லியவுட...

திருக்கார்த்தியல் - ராம் தங்கம்

Image
வாசிப்பு 57 திருக்கார்த்தியல் - ராம் தங்கம் அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்  தந்நோய்போற் போற்றாக் கடை. (குறள்  315) எனக்கு விருதுகள் மீது உள்ள நம்பிக்கை சரிந்து  அவற்றின் பெயர்கள், எண்ணிக்கை மறந்துப் போய் காலங்கள்  பல கடந்து விட்டது. அதற்கான காரணங்கள் அரசியல் பணம் தவிர வேறு எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ஒரு உண்மையான தரமான எழுத்துக்கோ , படைப்புக்கோ அல்லது சேவைக்கோ அல்லாமல் மேல் கூறப்பட்ட காரணங்களாகவோ அல்லது வெளிப்படாமல் மறைந்து  இருக்கும் வேறு காரணங்களாகவோ பெரும்பாலன விருதுகள் கொடுக்கப்பட்டு வருவதை சமீபத்திய விருது நிகழ்வுகள் உறுதிச் செய்கிறது விதிவிலக்காக கடும் இருட்டில் திடீரென தென்படும் மின்மினி பூச்சியின் வெளிச்சம் போல சில சமயங்களில் விருதுகள் சரியான படைப்புக்கும் , படைப்பாளிக்கும் , சேவைக்கும் கொடுக்கப்பட்டு விடுகிறது அதனின் தற்போதைய எடுத்துக்காட்டு தான் நண்பர் திரு.ராம் தங்கம் அவர்களின் திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்புக்கு கிடைத்து இருக்கும் யுவ புரஸ்கார் விருது. விருது என்பது ஒரு படைப்பாளிக்கு பெருமையல்ல ஆனால் அந்த படைப்பு பலதரப்பட்ட மக்களிடம் ...

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

Image
வாசிப்பு 56 ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்  எல்லா  வித சான்றுகளும் இருந்தும் இந்த உலகத்தில் ஒரு இனத்தின்  வரலாறு எப்படி எல்லாம் மாற்றப்பட்டும், திரிக்கப்பட்டும் பொய்கள் திணிக்கப்பட்டும் அந்த  அந்த  இன மக்களையே   இழிவாக  நினைக்க வைக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் நடந்தது இல்லை .நடக்கவும் நடக்காது ஏன் என்றால் அங்கே ஒவ்வொரு மனிதனும் தன் வரலாறை தானே அறிந்து இருப்பான். ஆனால் இங்கே நம் இனத்துக்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் சொல்லிய பொய்களை  நம் வரலாறு என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். அதனால் தான் 65 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகளை நம் தமிழ் இனம் இழந்து நிற்கிறது . கிழடி போன்ற தமிழ் நாகரிகம் கொண்ட நிலங்களை பெரும் மக்கள் போராட்டம் செய்தே அகழாய்வு செய்ய வைக்க வேண்டிய தேவை உள்ளது. இழிவை தவிர வேற என்னடா இருக்கு?உன் வரலாற்றில் என்று கேட்கும் இந்த திரிபுவாதிகளிடம்  பதில் சொல்ல முடியாமல்  நாம் வாயடைத்து போக காரணம் என்ன ?  நமது வரலாறை மாற்றி பொய் கலந்து நம்மிடமே  வந்து திணிக்கும் ப...