விதை அரசியல் - பாமயன்
வாசிப்பு 58 விதை அரசியல் - பாமயன் சீசனில் இல்லாத பழங்களை மனிதன் எல்லா பருவத்திலும் உண்ண பேராசை பூண்டபோது வேளாண்மையிலிருந்த இயற்கை நீங்கியது. - ஜப்பானிய வேளாண்மை அறிஞர் - மசனாபு ஃபுக்கோகா இங்கே நான் குறிப்பிட இருக்கும் விடயங்களை தாண்டி இந்த பொத்தகத்தில் சொல்லப்பட்டவை ஏராளம். அவை மிக அதிர்ச்சியானதும் கூட. இந்த நிலைக்கு வணிகமோ, அரசியல்வாதிகளோ, தவறான ஆராய்ச்சிகளோ மட்டும் காரணம் அல்ல நாமும் நம் அலட்சியமும் இங்கே முக்கியமான காரணங்கள். இந்த பொத்தகத்திற்கு கிடுக்கம் எழுத குறிப்பு எடுப்பதற்காக வேறு யாராவது இந்த பொத்தகத்தை பற்றி எழுதி உள்ளார்களா என்று இணையத்திலும் முகநூலிலும் தேடும் போது மிகவும் அயற்சிக்கு உள்ளானேன். இந்த பொத்தகத்தை பற்றி ஒருவர் கூட எழுதவில்லை. இயற்கையை ரசிக்கிறோம் .கவிதை புனைகிறோம், கட்டுரை வரைகிறோம் ஆனால் அந்த இயற்கையையும் அதற்கு இருக்கும் ஆபத்துகளையும் அதை தடுக்கும் நுண்ணறிவுளையும் படிக்கவும் எழுதவும் நாம் பெரும்பாலும் தவறுகிறோம் அல்லது விரும்புவது இல்லை. இயற்கை வேளாண்மை என்று சொல்லியவுட...