ஆயில் ரேகை - பா.ராகவன்
வாசிப்பு 54 ஆயில் ரேகை - பா.ராகவன் இதுவரை நாம் அனைவரும் எத்தனையோ வரலாறுகளை படித்து இருப்போம்.மன்னர்கள் வரலாறு, அரசியல் வரலாறு, உணவு வரலாறு, கட்சிகள் வரலாறு மற்றும் தமிழர் வரலாறு.... இப்படி நாம் படித்த வரலாறுகள் நீண்டு கொண்டே போகும் ஆனால் உலக வரலாற்றில் முதல் முறையாக ஐயா.பா.ராகவன் அவர்கள் ஒரு பூதத்தின் வரலாறை எழுதி உள்ளார் அதுவும் கிணறு வெட்ட கிளம்பிய பூதம்.நமது ஆயுளின் பாதியே இரையாக கேட்கும் இந்த பூதத்தின் கதையே சொல்லும் பா.ரா எழுதிய வரலாற்று பொத்தகத்தின் தலைப்பு "ஆயில் ரேகை" திரு.கமல்ஹாசன் நடித்த "அலாவுதீன் அற்புத விளக்கு" என்னும் திரைப்படத்தில் விளக்கில் இருந்து வெளியே வந்த பூதத்தினிடம் கேட்பதாக ஒரு வசனம் வரும் " இந்த மோதிரத்தில் இருப்பவன் யார் ? அதற்கு பூதம் சொல்லும் " அவன் இம்ரான் சின்ன பையன் நான் அவனை விட ஏழு கடல்களுக்கு அப்பால் இருக்கும் பூத உலகின் சக்கரவர்த்தி" இப்படியாக தங்கத்தை விட மதிப்பு மிகுந்ததாக இருக்கிறது இந்த வழுவழுப்பான பூதம் . தங்கத்தை கூட வேண்டாம் என்று சொல்லி விடலாம் ஏன் பயன்படுத்தாமல் கூட இருந்து விட முடியும் ஆனால் ஆயிலை நமத...